×

தஞ்சாவூர் ஆத்துப்பாலம் பகுதி முதல் ரயில்வே நிலையம் வரை சாலை இருபுறங்களில் அகலப்படுத்தும் பணி தீவிரம்

 

தஞ்சாவூர், மே1:தஞ்சாவூர் ஆத்துப்பாலம் பகுதி முதல் ரயில்வே நிலையம் வரை சாலையின் இருபுறங்களில் அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. தஞ்சாவூர் ஆத்துக்குளம் முதல் பழைய பேருந்து நிலையம் வரை போக்குவரத்து நிறைந்த பகுதி ஆகும். தஞ்சாவூர் மாவட்டத்தில் வாகன பெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வாகனங்கள் அதிகரிக்கும் அளவுக்கு சாலைகள் அதிகரிப்பதில்லை. இதனால் சாலையில் வாகன நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு சாலைகள் முடிந்தவரை அகலப்படுத்தப்பட்டு வருகின்றன.

இதனால் சாலையின் இருபுறங்களிலும் நெடுஞ்சாலைத்துறை சார்பாக அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. சாலையின் இரு புறங்களிலும் சாலைக்கென உள்ள காலி இடத்தில் மேல் மண்ணை அகற்றிவிட்டு புதிதாக ஒரே மாதிரியான மணல் மற்றும் ஜல்லி நிரப்பி தார் சாலை போடப்பட உள்ளது. அதை ஒட்டி இருபுறங்களிலும் பொக்லைன் இயந்திரம் மூலம் குழிகள் தோண்டப்பட்டு மண் மற்றும் ஜல்லி போடும் பணி நடைபெற்று வருகிறது. இதற்குப் பின் இரு புறங்களிலும் தார் போடப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

The post தஞ்சாவூர் ஆத்துப்பாலம் பகுதி முதல் ரயில்வே நிலையம் வரை சாலை இருபுறங்களில் அகலப்படுத்தும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Thanjavur Athupalam ,Thanjavur ,Athukulam ,Old ,Athupalam ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூர் மருத்துவமனை வளாகத்தில்...